அவசர பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்… சென்னை காவல்துறை புதிய அறிவிப்பு… கட்டுப்பாட்டு அறையும் தயார்…

அவசர பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்… சென்னை காவல்துறை புதிய அறிவிப்பு… கட்டுப்பாட்டு அறையும் தயார்…

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த 144 தடையை கண்காணித்து மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க இந்திய்ய இராணுவமும் களத்தில் இறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த ஊரடங்கின் போது பொதுமக்களுக்கு ஏதேனும் அவசர தேவைகள் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு சீர்மிகு காவல்துறை தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை தெரிவித்து இருக்கிறது. அந்த அறிவிப்பில்,  சென்னையில் அவசர தேவைகளுக்காக பயணம் செய்வோருக்காக கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டுள்ளது என்றும்,  இதில், திருமணம், மருத்துவம் இறப்பு போன்றவற்றிற்காக வெளியூர் செல்வோர் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு  விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தொடர்பு எண்கள்:  7530001100 என்ற எண்ணில் வாட்ஸ ஆப் மற்றும் எஸ். எம். எஸ் மற்றும் gcpcorano@2020 gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். பயணத்திற்கு அனுமதி சீட்டு பெற விண்ணப்பிப்போர் கோரிக்கை கடித்தத்துடன் அடையாள ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டும் என காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Kaliraj
Join our channel google news Youtube