சென்னை -ஒடிசா மோதல்.! இரண்டாவது வெற்றியை ருசிக்க போவது யார் ..?

10 அணிகளுக்கு இடையிலான ஆறாவது இந்தியன் சூப்பர் லீக்( ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி  பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இன்று சென்னை நேரு மைதானத்தில் 26 வது லீக் போட்டி நடைபெற உள்ளது.
இப்போட்டியில் சென்னை எப்சி மற்றும் ஒடிசா எப்சி அணிகள் மோதுகின்றன. இரண்டு முறை சாம்பியனான சென்னை எப்சி இதுவரை 5 போட்டிகளில் ஒரு போட்டியில் டிராவும் , மூன்று போட்டியில் தோல்வியை சந்தித்தது.
கடந்த 25-ம் தேதி  ஐதராபாத் அணியுடன் விளையாடிய போட்டியில் சென்னை எப்சி 2-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.ஒடிசா அணி 5 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் டிராவும், 2 தோல்வி கண்டுள்ளது. ஒரு வெற்றியை பெற்றுள்ளது.
இதனால் இரண்டு அணிகளும் இரண்டாவது வெற்றியை பெறவேண்டும் என்ற முனைப்புடன் இன்று  விளையாட உள்ளனர். இதனால் போட்டிக்கு பஞ்சமிருக்காது இப்போட்டி இரவு 07.30 மணிக்கு தொடங்குகிறது.
இதற்கு முன் கடந்த 25-ம் தேதி  ஐதராபாத் அணியுடன் வெற்றி பெற்றபோது சென்னை எப்சி இதே மைதானத்தில் தான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan