3 மாதத்தில் மட்டும் 10 ஆயிரதிற்கும் மேற்பட்டோரிடம் 16 லட்சத்துக்கும் அதிகமாக அபராத வசூல் மழை!

சென்னை மாநகரில், அதன் முக்கிய ஏரியாக்களுக்கு செல்ல உள்ளூர் பேருந்துகளில் மாதாந்திர பஸ் பாஸ், ஒருநாள் பாஸ் என பல்வேறு சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இருந்தும் சென்னை உள்ளூர் பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

இதில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 10, 791 பேர் சென்னை பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் பயணித்துள்ளனர். அவர்களிடம் இருந்து இதுவரை 16 லட்சத்து 80 ஆயிரத்து 850 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.