திருமணத்திற்கு மறுத்ததால் ஃபேஸ்புக் காதலனுக்கு அரிவாள் வெட்டு! மாணவியின் தந்தை வெறிச்செயல்!

சென்னை அம்பத்தூரில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார் மாணவி சத்யப்ரியா. இவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிமுகமானவர் லாரன்ஸ் இவர்கள் பேஸ்புக்கில் பழகி பின்னர் அது காதலாக மாறி இருவரும் நெருக்கமாக வாழ்ந்து வந்துள்ளதாக தெரிகிறது.

பின்னர் சத்யப்ரியா, லாரன்ஸை திருமணம் செய்யுமாறு கேட்டுள்ளார், இதற்க்கு லாரன்ஸ் மறுத்துவிட அதிர்ச்சி அடைந்த சத்யப்ரியா, தனது தந்தையிடம் கூற, கோபமுற்ற அவர்,

லாரன்ஸை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளார். இதனை கண்ட சுற்றி இருந்த மக்கள் லாரன்ஸை மீட்டு சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் சேர்த்தனர்.  பின்னர் போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாணவியின் தந்தை கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர், தனது மகளுடன் காதலித்த குடித்தனம் நடத்திவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுத்ததால் வெட்டினேன் என கூறியுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.