மதுக்கடைகளை மூட அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது.! – உயர்நீதிமன்றம் கேள்வி.!

மதுக்கடைகளை மூட அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது.! – உயர்நீதிமன்றம் கேள்வி.!

சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாது என்பதால் மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியவில்லை. அப்படியானால், சமூக இடைவெளியை பின்பற்றப்படாத மதுக்கடைகளை மூட அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது. – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழக மகிளா காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சுதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது, மாணவர்களுக்கு சத்துணவு மற்றும் முட்டை வழங்க வலியுறுத்தி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தனிமனித இடைவெளியை மாணவர்கள் பின்பற்றுவதில் பிரச்சினை ஏற்படும் என்பதால் பள்ளிகளில் மாணவர்களுக்கு முட்டை வழங்க தற்போது முடியாது. என தெரிவித்தார்.

இதனை கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ‘ சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாது என்பதால் மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியவில்லை. அப்படியானால், சமூக இடைவெளியை பின்பற்றப்படாத மதுக்கடைகளை மூட அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது.’ என கேள்வி எழுப்பினர். மேலும், ‘ பள்ளிகளில் வாரத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறையேனும் முட்டை வழங்க வேண்டும் அதனை எப்படி வழங்குவது என்பது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும்.’ எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube