ஆவின் பால் விலை உயர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு !வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட  வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீபத்தில் தமிழக அரசு ஆவின் பால்விலையை  உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது.இந்த நிலையில் பால் விலைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு ஓன்று தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முனி கிருஷ்ணன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்தார்.அதில்,பால் விலை உயர்வு மக்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது என்று தெரிவித்தார்.இதனையடுத்து  விசாரணைக்கு வந்த இந்த வழக்கினை தள்ளுபடி செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.