சென்னை விமான நிலையம் அருகே பரபரப்பு..! தீப்பிடித்து எரிந்த கார்..!

சென்னை விமான நிலையம் அருகே பரபரப்பு..! தீப்பிடித்து எரிந்த கார்..!

சேலத்தை சார்ந்த நான்கு பேர் சென்னைக்கு ஒரு காரில் வந்து கொண்டு இருந்தனர்.கார்  மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தின் அருகே உள்ள மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்து உள்ளது.
இதை தொடர்ந்து காரில் இருந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய அடுத்த சில நிமிடங்களில் கார் தீ பிடிக்க தொடங்கியது.உடனடியாக தீயணைப்புத்துறை அங்கு இருந்தவர்கள் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விமான நிலையம் மற்றும் தாம்பரத்திலிருந்து 2 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தனர். ஆனால் கார்  முற்றிலும் எரிந்து சேதமானது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அங்குவந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.
விமான நிலையம் அருகே கார் தீ பிடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube