கணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை! தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்!

கணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை! தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்!

சென்னை மாங்காடு பகுதியில் திருமணமான பெண் வசித்து வருகிறார். இவரது கணவர்  பெங்களூருவில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர், இந்த வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் தனக்கு அண்மைக்காலமாக பக்கத்து வீட்டில் வசிக்கும் பரத் என்பவர் அடிக்கடி பாலியல் தொல்லை தருவதாக மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும்,   அவர்கள் குடும்பத்தினர் தன்னை தாக்கியதாகவும், பின்னர் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் தீக்குளிக்க முயற்சித்ததாகவும், ஆனால்,போலீசார் தன்னை சமாதான படுத்தவே முயற்சித்தனர் எனவும் பபுகார் கூறி, கமிஷனர் அலுவலகத்தில் அந்த பெண் புகார் மனு அளித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube