சந்திராயன்-2 அப்டேட்! ஆர்பிட்டலில் இருந்து லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது!

நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இந்தியாவிலிருந்து இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் மூலமாக சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அது முதலில் பூமியின் வட்டப்பாதையில் சுற்றி விட்டு தற்போது நிலவின் வட்டப்பாதையில் ஐந்து முறை சுற்றி அதன் நிலவின் தரை பகுதியை நெருங்கியுள்ளது.

தற்போது சந்திரன்-2,  ஆர்பிட்டல்லில் இருந்து விக்ரம் என பெயரிடப்பட்டுள்ள லேண்டரை பிரிக்கும் பணி தொடங்கி,  இதற்கான சமிக்ஞைகளை இஸ்ரோ சந்திராயன்-2விற்கு அனுப்பியது.

தற்போது லேண்டர், அர்பிட்டலில் இருந்து, பிரிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.