பூமியை பிரிந்து நிலவை வட்டமடிக்க சென்றது சந்திராயன் 2!

கடந்தமாதம் ஜூலை 22ஆம் தேதி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஸ்ரீகரிக்கோட்டாவில் இருந்து சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய இந்த சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்பட்டது.

இது ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை [பூமியின் வட்டப்பாதையில் சுற்றி அதன் பிறகு நிலவின் வட்டப்பாதையை சென்றடையும். அந்த வகையில் இன்று பூமியின் வட்டப்பாதையில் இருந்து முழுவதுமாக வெளியேறி தற்போது நிலவின் வட்டப்பாதையை சுற்றி வருகிறது.

செப்டம்பர் 1ஆம் தேதி  முதல் நிலவினை 114 – 128 கிமீக்கள் தூரம் நெருங்கி, செயற்கைக்கோளானது சந்திராயன் விண்கலத்தில் இருந்து பிரிந்து, நிலவின் தரை பகுதியை சென்றடையும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.