#BREAKING : சந்திரயான்-2 விண்கலம் வரும் 22-ம் தேதி விண்ணில் ஏவப்படும்-இஸ்ரோ அறிவிப்பு

சந்திராயன் 2 விண்கலம் ஜுலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிலாவில் விண்கலத்தை இறக்கி ஆய்வு நடத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டது.

அதன்படி  சந்திராயன் 2 ஜி.எஸ்.எல்.வி. மார்க் – 3 ராக்கெட் மூலம் ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில்  ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்தது.ஆனால் அன்று  ஏவப்பட இருந்த  சந்திராயன் 2  தொழிநுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இஸ்ரோ தெரிவித்தது.

இந்த நிலையில் இன்று இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில்,ஜூலை 22  ஆம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு  சந்திராயன் 2  விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது என்று  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.