HDFC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஓய்வு பெற்றார்.!

HDFC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஓய்வு பெற்றார்.!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்று எச்டிஎப்சி (HDFC). இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆதித்யா பூரி கடந்த 26 வருடங்களாக தலைமை பொறுப்பு வகித்து வருகிறார். ஆர்பிஐ விதிப்படி 70வயதானால் தலைமை பொறுப்பில் இருந்து ஓய்வு பெற வேண்டும்.

இந்த நிலையில், இவருக்கு 70வயதை ஒட்டிய நிலையில் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். கடைசி தினமான நேற்று இவரது ஓய்வு நாளை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேரலையில் கண்டு மகிழ்ந்ததுடன் இந்நிகழ்வில் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்கும் சஷிதர் ஜகதீஷ் அவர்களும் பங்கேற்றுள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube