செப்.,24 நாடு தழுவிய போராட்டம்-காங்.அறிவிப்பு!

செப்.,24 நாடு தழுவிய போராட்டம்-காங்.அறிவிப்பு!

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் செ.,24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

வேளாண் மசோதாவை எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர் கட்சிகள் தொடர்ந்து தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றது.

இந்நிலையில், ஏ.கே.அந்தோணி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில்  பிரியங்கா வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இக்கூட்டத்திற்கு பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அந்தோணி   காங்.,கட்சி செப்.,24ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்த உள்ளதாக தகவ தெரிவித்தார்.

மேலும் காங்., செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா இது குறித்து தெரிவிக்கையில், ‘வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நாடு முழுவதும் செய்தியாளர்கள் சந்திப்பு தொடர்ந்து நடைபெறும். கட்சி தலைவர்கள், தங்கள் மாநில கவர்னர்களிடம் இது குறித்து குறிப்பாணையை சமர்ப்பிப்பார்கள் என்று தெரிவித்தார்.

author avatar
kavitha
Join our channel google news Youtube