டெல்லியில் 13 நாட்கள் கழித்து லேசான மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் 

டெல்லியில் 13 நாட்கள் கழித்து லேசான மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் 

டெல்லியில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரத்தில் 13 நாட்களாக மழைப் பெய்யவில்லை என்றும் கடைசியாக செப்டம்பர் 8 அன்று  1.3 மி.மீ மழை பெய்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 36.8 டிகிரி செல்சியஸில் பதிவாகியுள்ளது. இதனால், இன்று மற்றும் நாளை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதம், தேசிய தலைநகரில் 80 சதவீத்திற்கும் குறைவான மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube