மும்பையில் கனமழைக்கு வாய்ப்பு..!

மும்பை மற்றும் தானே உள்ளிட்ட கொங்கன் பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது, இந்த நிலையில் ராடார், செயற்கைக்கோள் படங்கள், கொங்கன் கடற்கரையில் தீவிரமான மேகச் செயல்பாட்டைக் காட்டுகின்றன. குறிப்பாக மும்பை மற்றும் தானேவில் மிக அதிக அளவிலான மழை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மும்பை மற்றும் தானே, ராய்கட் மற்றும் பால்கர் மாவட்டங்களுக்கு மும்பையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இன்று முழுவதும்மும்பையில் மிகக்கனமழை பெய்யும் என்றும், மேலும் நேற்று ராய்காட் மற்றும் ரத்னகிரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்ட அங்கு அதிக முதல் மிக அதிக அளவிலான மழை பெய்யும் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்த 6 மணி நேரத்திற்குள் ராடாரில் காணப்படுவது போல, மும்பையில் கனமழை பெய்யும் என்று கூறப்படுகிறது, மேலும் அடுத்த 6 மணி நேரத்தில் மும்பையில் ஐசோ இடங்களில் அதிக மழை பெய்யக்கூடும். என்று இந்திய இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.