தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு.!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல்,  ஆகிய 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

வடதமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், லேசானது, முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.

மேலும் மத்திய வங்கக்கடல் மன்னார் வளைகுடா, அந்த மான் பகுதிக்கு 5 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவித்துள்ளது.

அதிகபட்ச்சமாக தாமரைப்பாக்கத்தில் 10,பந்தூரில் 9,தேவாலா, பலவிடுதியில், தலா 8.செ.மீ மழை பதிவாகியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.