மளிகைக் கடைக்குச் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி .!

  • திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்துள்ள பாலவிநாயகர் தெருவை சேர்ந்தவர் கோமதி. கோமதியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனர்.
  • அப்போது சுதாரித்துக்கொண்ட கோமதி ஒருகையில் நகையை பத்திரமாகப் பிடித்துக் கொண்டு சத்தம் போட்டுள்ளார்.அந்த மர்ம நபர்களை போலீசார்  தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்துள்ள பாலவிநாயகர் தெருவை சேர்ந்தவர் கோமதி.  இவர் நேற்றிரவு தனது வீட்டில் அருகே உள்ள மளிகைக் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் ஹெல்மெட் அணிந்து வந்தனர்.

அவர்கள்  கோமதியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனர். அப்போது சுதாரித்துக்கொண்ட கோமதி ஒருகையில் நகையை பத்திரமாகப் பிடித்துக் கொண்டு சத்தம் போட்டுள்ளார்.

இதையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் வருவதை பார்த்து கொள்ளையர்கள் நகை விட்டு விட்டு தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து செங்குன்றம் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk