இந்த பல்கலைக்கழகத்திற்கு (டிச.,17 முதல் ஜன.20) வரை விடுமுறை அறிவிப்பு

  • டெல்லியில் மாணவர்கள் மீதான போலீசாரின் தடியடியைக் கண்டித்தும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பும் தெரிவித்து தமிழத்தில் மாணவர்கள் போராட்டம். 
  • மாணவர்களின் போராட்டம் காரணமாக திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.அப்போது மாணவர்களை கடுமையாக போலீசார் தாக்கினர். போலீசாரின் இந்த தடியடியை கண்டித்தும், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும்  திருவாரூர் மாவட்ட நீலக்குடியில் உள்ள மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் டெல்லி மாணவர்களை போலீசார் தாக்கியத்தை கண்டித்து  மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாணவர்களின் போராட்டம் காரணமாக திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு நாளை முதல் ஜன.20 வரை விடுமுறையை பல்கலைகழக நிர்வாகம்  அறிவித்துள்ளது.

author avatar
kavitha