அபிநந்தன் தொடர்பான வீடியோக்களை நீக்க யுடியூப் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவு!!

அபிநந்தன் தொடர்பான வீடியோக்களை நீக்க யுடியூப் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவு!!

  • இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் கைது செய்து வைத்துள்ளது.
  • இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் தொடர்பான வீடியோக்களை நீக்க யுடியூப் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து F16 என்று போர் ரக விமானத்தில் தாக்குதல் நடத்த வந்த போது  இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது.

மேலும் பாகிஸ்தான் விமானத்தை விரட்டி தாக்குதல் நடத்தி இந்திய அரசு  பதிலடி கொடுத்தது. இந்த பதிலடி தாக்குதலில் இந்திய விமானம் கீழே விழுந்து விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கி கொண்டார். இதையடுத்து இந்திய எல்லைப் பகுதியில் தொடர் பதற்றம் ஏற்படுகின்றது.

இந்நிலையில் இந்திய விமானி அபிநந்தனை விடுவிக்ககோரி இந்தியா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது.இதையடுத்து இந்திய விமானி அபிநந்தன் விவகாரம் குறித்து ஓரிரு நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.மேலும் அபிநந்தன் தொடர்பான விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகின்றது.இந்த விடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பாகிஸ்தான் அரசு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் அபிநந்தன் தொடர்பான வீடியோக்களை நீக்க யுடியூப் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அபிநந்தன் தொடர்புடைய 11 வீடியோக்களை நீக்க யூட்யூப் நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *