தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான பணிகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்தவேண்டும்-திருச்சி சிவா

மாநிலங்களவையில் எம்.பி திருச்சி சிவா பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான  பணிகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்தவேண்டும் .2 ஆயிரம் அடியில் துளையிட்டு ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் சுற்றுச்சூழலுக்கும் மட்டுமல்ல, மனித உயிருக்கும் கேடு விளைவிக்கும் .

இந்தியா எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டியது அவசியம்தான், அதற்காக உயிர்நாடியான விவசாயத்தை அழிக்க வேண்டாம்.ஹைட்ரோ கார்பன் திட்டத்தை பாலைவனம் போன்ற ஓரிடத்தில் செயல்படுத்துங்கள்  என்று எம்.பி திருச்சி சிவா பேசினார்.