புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து , பொதுத்துறை பங்கு விற்பனையை கைவிட வேண்டும் என்ற 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஊழியர்கள் இன்றும் நாளையும், மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் , போக்குவரத்து கழக தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள் முழுமையாக பங்கேற்குமாறு, ஐ.என்.டி.யு.சி, சி.ஐ.டி.யு உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலைநிறுத்த போராட்ட்டத்தால் மத்திய அரசு ஊழியர்கள் 15 லட்சம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகின்றது.