மறுஉத்தரவு வரும் வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை! மத்திய அரசு அதிரடி..!

சமீபத்தில் மகாராஷ்ட்ரம், ஆந்திரா, குஜராத், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இடைவிடாமல் பெய்த மழையால், வெங்காயம் பயிர்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. இதன்காரணமாக, வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயரும் சூழல் உருவானது.

இந்நிலையில் உள்நாட்டு விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. மேலும் , மறு உத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.