மத்திய பட்ஜெட் ஏழை மக்களுக்கு கசப்பாய் இருக்கிறது – மு.க.ஸ்டாலின் கருத்து !

மத்திய அரசின் நிதித்துறை பட்ஜெட்டானது ஏழை மக்களுக்கு கசப்பையும், கார்பரேட் நிறுவனங்களுக்கு இனிப்பையும்  வழங்கி இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  நிதித்துறை பட்ஜெட் குறித்த தம் கருத்தினை தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நிதித்துறை பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த பட்ஜெட் அறிவிப்பில் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் உணர்வுகளும் , அனைத்து மாநில மக்களின் எதிர்பார்ப்புகளும் பட்ஜெட்டில் பிரதிபலிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தொடர் அறிவிப்புகளும் மற்றும் அலங்கார வார்த்தைகளும் நிறைந்த வார்த்தைகளாய் மட்டுமே இந்த பட்ஜெட் அறிவிப்பு இருப்பதாக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.