165 கோடி ரூபாய்க்கு பிரபல நட்சத்திர விடுதியை பேரம்.! சினிமா பாணியில் மோசடி.! கைதான தரகர்கள்.!

165 கோடி ரூபாய்க்கு பிரபல நட்சத்திர விடுதியை பேரம்.! சினிமா பாணியில் மோசடி.! கைதான தரகர்கள்.!

  • சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியை விற்பதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட 3 தரகர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
  • நட்சத்திர விடுதியை பார்வையிடுவது போல், சுற்றிக்காட்டிய மூவரும் 165 கோடி ரூபாய்க்கு விடுதியை பேரம் பேசியுள்ளனர்.

சென்னை வடபழனியில் உள்ள பிரபல அம்பிகா எம்பயர் என்ற நட்சத்திர சொகுசு விடுதி ஒன்றை விற்க போவதாக கூறி மூன்று பேர், கேரள கட்டுமான நிறுவனத்தை அணுகியுள்ளனர். இதனையடுத்து அந்த நிறுவன மேலாளர், விற்பதாக கூறப்படும் நட்சத்திர விடுதியை பார்வையிட வந்துள்ளார். பின்னர் அவரை அழைத்து வந்த தரகர்கள், அதே நட்சத்திர விடுதியில், அவருக்கு தெரியாமல் அறை ஒன்றை புக்கிங் செய்து அதில் தங்க வைத்துள்ளனர். தொடர்ந்து நட்சத்திர விடுதியை பார்வையிடுவது போல், சுற்றிக்காட்டிய மூவரும் 165 கோடி ரூபாய்க்கு விடுதியை பேரம் பேசியுள்ளனர்.

இயதையடுத்து, அவர்களின் நடவடிக்கையால் சந்தேகம் அடைந்த நட்சத்திர விடுதியின் மேலாளர், போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். விடுதிக்கு வந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்த போது தான், நூதன மோசடி தெரியவந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தரகர்கள் தட்சணாமூர்த்தி, பரமானந்தன், கருணாகரன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இதுபோன்று பலரிடமும் ஏமாற்றி இந்த கும்பல் மோசடி செய்துள்ளதும், விசாரணையில் தெரியவந்ததால், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube