விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!பிகில் தயாரிப்பாளர் போட்ட அதிரடி ட்வீட்!

விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!பிகில் தயாரிப்பாளர் போட்ட அதிரடி ட்வீட்!

  • விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் அளிக்கும் வகையில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இனங்க பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அற்புத தகவல்.
  • பீகில் படம் 50 ஆவது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடுகிறது.

தமிழ் சினிமா ரசிகர்களிடையே இளைய தளபதி என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விஜய் ஆவார்.இவரது படம் திரைக்கு வருகிறது என்றாலே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு அளவே கிடையாது.

இந்நிலையில் தற்போது இவர் நடித்த பிகில் திரைப்படம் 300 கோடி வரை வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.ஆனால் இது குறித்து இது நாள்வரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிவராமல் இருந்தது.

இதனால் விஜய் ரசிகர்கள் பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனாவை தகவலை வெளியிடுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இதன் காரணமாக அர்ச்சனா தனது டுவிட்டர் பக்கத்தில் பிகில் படம் 50 நாளை கடந்து வெற்றி நடை போடுகிறது என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றியையும் படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து மகிழுமாறு கூறியுள்ளார்.இதன் காரணமாக பிகில் 50 வது நாளை  தொடர்ந்து #50daysofindustryhitbigil என்று ஹேஷ்டேக் செய்து விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன.

 

Join our channel google news Youtube