சிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த முயற்சி செய்து வரும் நிலையில் காங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.இதன் பின்னர் அவர் தனது வீட்டிற்கு வந்தார்.இதையறிந்த சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.உள்ளே அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சிதம்பரத்தின் வீட்டின்  சுவர் ஏறி குதித்து  சிபிஐ அதிகாரிகள் இல்லத்திற்குள் சென்றுள்ளனர்.