டி.கே.சிவகுமாருக்கு அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு

டி.கே.சிவகுமாருக்கு அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு விதிக்கப்பட்டிருந்த அமலாக்கத்துறை காவல் வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான  டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீட்டில் ரூ.8.50 கோடி சிக்கியது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வந்தது. மேலும் இது குறித்து  அமலாக்கத்துறையும்   வழக்குப் பதிவு செய்திருந்தது.

இதனைதொடர்ந்து  4 நாட்கள் அமலாக்கத்துறை சிவக்குமாரை  செய்து வந்த பின்பு அவரை கைது செய்தது.இந்த  நிலையில் இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் சிவகுமார் ஆஜர்படுத்தப்பட்டார்.இதில்,டி.கே.சிவகுமாருக்கு விதிக்கப்பட்டிருந்த அமலாக்கத்துறை காவல் வரும் 17ம் தேதி வரை நீட்டித்து  உத்தரவு பிறப்பித்துள்ளது.

Join our channel google news Youtube