நெல்லை மேயர் கொலை வழக்கு !சிபிசிஐடி போலீசார் விசாரணை

நெல்லையில்  கொலை சம்பவம் நடந்த உமா மகேஷ்வரி வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துகின்றனர் .

ஜூலை 23 ஆம் தேதி நெல்லையில் உள்ள ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர்  உமா மகேஸ்வரி,அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

கொலை  சம்பவம் குறித்து காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர். இவர்கள் நகைக்காக கொலை செய்யப்பட்டார்களா அல்லது வேறு ஏதேனும் விவகாரம் என்று குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.ஆனால் துப்பு துலங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில் சிபிசிஐடி போலீசார் தங்கள் வசம் உள்ள ஆவணங்களை ஒப்பிட்டு விசாரணை நடத்தவுள்ளனர்.