ஒக்கேனக்கல்லை வந்தடைந்தது காவிரி தண்ணீர்!

கர்நாட மாநிலத்தில், கடந்த 17-ம் தேதி பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் திறக்கப்பட்டது. கர்நாடக அணைகளில் இருந்து 7,500 கனஅடி வீதம் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

நான்கு நாட்களுக்கு முன் திறந்துவிடப்பட்ட தண்ணீர், தற்போது, தமிழக எல்லையான ஒகேனக்கல்லை வந்தடைந்துள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், குடகு, மாண்டியா உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறதால்  நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.