மத்திய அரசை கண்டித்து தீக்குளித்த சரவணசுரேஷ் எண்ணத்திற்காக, காவிரி பிரச்சனையை தீவிரப்படுத்தப் போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தி, தீக்குளித்த வைகோவின் மைத்துனர் மகன் சரவணசுரேஷ் மதுரை தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் பெருமாள்பட்டியில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, சரவண சுரேஷின் உடலுக்கு வைகோ அஞ்சலி செலுத்தினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்