டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது !

டெல்லி காவிரி மேலாண்மை ஆணை கூட்டம் தலைவர் மசூத் உசேன் தலைமையில் தொடங்கியது. மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழக மற்றும்  கர்நாடக பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக கர்நாடக அணையிலிருந்து காவிரி நீரை திறக்க கோரி தமிழக அரசு இந்த கூட்டத்தில் வலியுறுத்தபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை திட்டத்தை எதிர்க்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.காவிரியில் இருந்து ஜூன் மாதம் திறக்க வேண்டிய 9.19 டிஎம்சி திறந்துவிடும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

author avatar
murugan

Leave a Comment