காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இன்றும் போராட்டம்.. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்றும் போராட்டம்..

 

மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தொடர்ந்து அதிமுக எம்.பிக்கள் கோஷம் எழுப்பி, அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக மத்திய அரசு அமைக்கவேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பிக்கள் இன்றும் தொடர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment