10-ஆம் வகுப்பு தேர்வை 2 மாதம் தள்ளி வைக்க கோரி வழக்கு.!

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளிவைக்க கோரி ஆசிரியர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளிவைக்க கோரி ஆசிரியர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு. வரும் 15ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் 2 மாதங்கள் தள்ளி வைக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது .பத்தாம் வகுப்பு பொது தேர்வு 2 மாதத்தில் வைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் பக்தவசலம் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஆசிரியர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளாமல் ஜூன் 15ம் தேதி முதல் 10ஆம் வகுப்பு தேர்வு நடத்துவதில் உள்ள கொரோனா  சூழ்நிலையில் எத்தனை சுகாதார பணியாளர்கள் ஈடுபடுத்துவது என கூறவில்லை. மாணவர்கள் தேர்வு எழுதுவது கடினம் என்பதால் 15 நாள் பயிற்சி வகுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனு.

ஏற்கனவே இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு சிறப்பு தேர்வு எழுதிய பிறகு திரும்ப அழைத்து வருவதற்கும் பேருந்து வசதி. சிறப்பு 10,11ம் வகுப்பு  49 பேருந்து இயக்கப்படுவதால் 72 பள்ளிகள் சேர்ந்த 800 மாணவர்கள் பயன் பெறுவர் என மாற்றுத் திறனாளி நலத்துறை கூறியிருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வந்துள்ளது .

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.