காவலர் தேர்வில் முறைகேடு -சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

காவலர் தேர்வில் முறைகேடு -சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

2019 -ஆம் நடைபெற்ற காவலர் தேர்வில் முறைகேடு நடந்துள்ள நிலையில் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4, குரூப் 2ஏ  தேர்வில் முறைகேடு நடத்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் 2019 -ஆம் நடைபெற்ற காவலர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக 15 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.அவர்களது வழக்கில், 2019 -ஆம் நடைபெற்ற காவலர் தேர்வில் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும்.விழுப்புரம் மற்றும் வேலூரில் ஒரே பயிற்சி நிறுவனத்தில் படித்தவர்கள் அதிகஅளவில் தேர்ச்சி பெற்றதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube