விருதுநகர் அருகே சாத்தூரில் ​நர்சிங் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கல்லூரி தாளாளர் கைது!

விருதுநகர் அருகே சாத்தூரில் ​நர்சிங் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கல்லூரி தாளாளர் கைது!

போலீசார் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் கல்லூரி தாளாளர் உள்பட 3 பேரை  கைது செய்துள்ளனர்.

சாத்தூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சாத்தூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவருகிறார்.

திடீரென தனது மகளைக் காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த பெண்ணை சாத்தூர் பேருந்து நிலையம் அருகே கண்ட போலீசார் அவரை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, பேருந்து நிலையத்தில் பூக்கடை நடத்திவந்த பாண்டி என்பவரும், வன்னிமடையை சேர்ந்த மாரிமுத்து என்பவரும் தன்னை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக அவர் கூறினார்.

மேலும், தனது கல்லூரி தாளாளரும் தன்னை தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்துவந்ததாகவும் அந்த பெண் தெரிவித்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த சாத்தூர் மகளிர் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *