அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு எதிராக தொடர்ந்த வழக்கு : தபால் ஓட்டுகளுடன் ஆஜராக உத்தரவு

  • சென்னை உயர்நீதிமன்றத்தில் தொல்.திருமாவளவன் வழக்கு தொடர்ந்தார்.
  • திருமாவளவன் தொடர்ந்த வழக்கில்  தபால் ஓட்டுகளுடன் தேர்தல் அதிகாரி ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இந்த தேர்தலில் திருமாவளவன் அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறனிடம் தோல்வி அடைந்தார்.

எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தொல்.திருமாவளவன் வழக்கு தொடர்ந்தார் .அந்த வழக்கில்,அதிமுக வேட்பாளர் முருகுமாறனின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றுதெரிவித்தார்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில்காட்டுமன்னார்கோயில் தொகுதியில் நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன் தற்போதைய மாவட்ட தேர்தல் அதிகாரி ஜனவரி 20-ஆம் தேதி ஆஜராக சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.மேலும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.