புல்வாமா தாக்குதல் போல் மற்றோரு தாக்குதல் முறியடிப்பு.! ஜம்முவில் 52 கிலோ வெடிபொருட்கள் கண்டெடுப்பு.!

புல்வாமா தாக்குதல் போல் மற்றோரு தாக்குதல் முறியடிப்பு.! ஜம்முவில் 52 கிலோ வெடிபொருட்கள் கண்டெடுப்பு.!

காஷ்மீரில் 52 வெடிபொருட்கள் கண்டெடுத்து, புல்வாமா தாக்குதல் போன்ற மற்றோரு தாக்குதல் நடக்காமல் இந்திய ராணுவம் ராணுவம் முன்பே முறியடிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் நேற்று காலை 8 மணியளவில் கடிகல் பகுதியில் கரேவா என்ற இடத்தில் ஒரு பழத்தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த ஒரு சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை பற்றிய ரகசிய தகவல், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு தெரிய வந்தது. அந்த நீர் தொட்டியில் 52 கிலோகிராம் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒவ்வொன்றிலும் 125 கிராம் கொண்ட 416 பாக்கெட் வெடிபொருட்கள் இருந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் தேடுதலில் ஈடுபட்ட போது, அதேபோன்ற தொட்டி ஒன்றில் 50 டெட்டனேட்டர்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வெடிபொருள் “சூப்பர் 90” என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 2019ல் இதே பகுதியில் நடந்த புல்வாமா தாக்குதலில் இருந்து 9 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி நடந்த அந்த தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

இதற்கு பின்னணியாக செயல்பட்ட பாகிஸ்தானின் பாலகோட்டில் இருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் பயிற்சி முகாம் மீது இந்திய விமான படை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், அப்பகுதியில் 52 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை தற்போது இந்திய ராணுவம் கண்டறியப்பட்டு, புல்வாமா தாக்குதல் போன்ற மற்றோரு தாக்குதல் நடக்காமல் நம்நாட்டு ராணுவம் முன்பே முறியடிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube