மதுபானக் கடைகளைத் திறக்கலாம் ? வழிபாட்டுத் தலங்களை மூட வேண்டுமா ? – கமல்நாத்

மதுபானக் கடைகளைத் திறக்கலாம் ? வழிபாட்டுத் தலங்களை மூட வேண்டுமா ? – கமல்நாத்

மதுபானக் கடைகளைத் திறக்க முடிந்தால், வழிபாட்டுத் தலங்களை ஏன் மூட வேண்டும்? கமல்நாத் ட்விட்டரில் காட்டமாக கேட்டுள்ளார் .

மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான கமல் நாத் சனிக்கிழமை ட்விட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் மதுபானக் கடைகளைத் திறக்க முடிந்தால், வழிபாட்டுத் தலங்களை ஏன் மூட வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் .

மேலும்  அவர் மாநில அரசானது வழிபாட்டுத்தலங்களை திறக்க கர்நாடக அரசு மற்றும் மேற்குவங்க அரசை பின்பற்ற வேண்டும் என  தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .

மத்திய பிரதேசத்தில்  நேற்று மட்டும்  246  பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது .மேலும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை7,891 ஐ எட்டியுள்ளது.4,444பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 343 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

author avatar
Castro Murugan
Join our channel google news Youtube