கமலஹாசனை விசாரணைக்கு அழைப்பதா? மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம்!

இயக்குனர் சங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படப்பிடிப்பு போது விபத்து ஏற்பட்டு, 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து போலீசார் இயக்குனர் சங்கர் மற்றும் கமலஹாசனை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விபத்து நடந்த தளத்தில் இருந்து சில நொடிகளுக்கு முன்பு தான் கமல்ஹாசன் அந்த இடத்தில் இருந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சியை பிடிக்காத தமிழக அரசு, காவல்துறை மூலம் சாட்சி என்ற பெயரில் அவரை அழைத்து 3 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளதாகவும்’ அறிக்கையில், கூறப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.