கேரளாவில் முற்றுகிறது ஆளுநர்-முதல்வர் மோதல்… அரசியல் சாசனத்தை முதலில் படியுங்கள் என முதல்வர் ஆளுநருக்கு அறிவுரை…

  • குடியுரிமை சட்ட விவகாரம் ஆளுநருக்கு முதல்வர் பதிலடி.
  • இந்திய அரசியல் சாசனத்தை ஆளுநர் படிக்க வேண்டும் என அறிவுரை.

குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறக் கோரி கேரள மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம் பயனில்லாதது என அந்த மாநில ஆளுநர் தனது எதிர்ப்பை பதிவு செய்து  இருந்தார். மேலும் குடியுரிமை சட்டத்திற்க்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையும் விமர்சித்த ஆளுநர், நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது என்று கூறி இருந்தார். இந்நிலையில் கேரள மாநிலம்  மலப்புரத்தில் நடைபெற்ற அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் என்ற நிகழ்ச்சியில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநரின் இந்த  பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். நம் நாட்டில்  முன்பு மன்னர்களை விட அதிகாரம் மிக்கவர்களாக ஆங்கிலேயர்கள்  இருந்ததாக சுட்டிக்காட்டிய அவர், ஆனால் தற்போது  அப்படி ஒன்றும் கிடையாது என்றார். மேலும் கூறிய அவர், நம் மாநில சட்டப்பேரவையை விட நம் மாநிலத்தில் யாரும் உயர்ந்தவர்கள் இல்லை என்றார்  முதல்வர் பினராயி.மேலும் கூறிய அவர், இந்திய அரசியல் சாசனத்தை நம் மாநில  ஆளுநர் படிக்க வேண்டும் என்றும், அதன்மூலம் ஆளுநருக்கு தேவையான விளக்கம் கிடைக்கும்  காட்டமாக கூறியுள்ளார்.

author avatar
Kaliraj