” C.B.I_யை கடமையை செய்ய விடுங்கள் ” ராஜ்நாத் சிங் வேண்டுகோள்…!!

C.B.I_யை கடமையை செய்ய விடுங்கள் என என்று மமதா பானர்ஜியை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.மேலும் அவர் மத்திய அரசு C.B.I_யை தவறாக பயன்படுத்துகின்றது . முறையாக அனுமதி பெறாமல் விசாரணை நடத்துவது ஏற்புடையது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு தொடர்ந்து மூன்றாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் மேற்கு வங்க பிரச்சினையை திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சவுகதா ராய் கிளப்பினார்.இதற்க்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பதிலளித்து பேசுகையில் கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு எதிராக சி.பி.ஐ. அதிகாரிகள் செயல்பட்டனர் என்று உடனடியாக முடிவுக்கு வந்து விடுவது தவறு .C.B.I கொல்கத்தா காவல்துறை ஆணையருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை , எனவே C.B.I_யை  தங்கள் கடமையை செய்ய விடுங்கள் என்று மமதாவுக்கு ராஜ்நாத்சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment