மேற்குவங்க அரசுக்கு ஆப்படிக்கு C.B.I ….அடுத்தடுத்து ரெண்டு வழக்குகள்…!!

மேற்குவங்க அரசுக்கெதிராக C.B.I  இரண்டு வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.மேலும் அவர் மத்திய அரசு C.B.I_யை தவறாக பயன்படுத்துகின்றது . முறையாக அனுமதி பெறாமல் விசாரணை நடத்துவது ஏற்புடையது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு தொடர்ந்து மூன்றாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் C.B.I உச்சநீதிமன்றத்தில் இரண்டு வழக்கு தாக்கல் செய்துள்ளது.அதில் C.B.I விசாரணைக்கு ஒத்துழைப்பு தராத கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவேண்டும் மற்றும் விசாரணைக்கு சென்ற C.B.I அதிகாரிகளை கைது செய்ததற்கு எதிராகவும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதை அடுத்து மீண்டும் மேற்கு வங்க அரசுக்கு C.B.I சட்ட ரீதியான நெருக்கடியை கொடுத்துள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment