காலியாக உள்ள 2 இடங்களுக்கு வரும் அக்டோபர் 16-ஆம் தேதி இடைத் தேர்தல்-தேர்தல் ஆணையம் அறிவிப்பு

காலியாக உள்ள 2 இடங்களுக்கு வரும் அக்டோபர் 16-ஆம் தேதி இடைத் தேர்தல்-தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு வரும் அக்டோபர் 16-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

ஆகஸ்ட் 24-ஆம் தேதி முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ உடல் நல குறைவால்  காலமானார்.மேலும் கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி இந்தியாவின் புகழ் பெற்ற வழக்கறிஞரும், 6  முறை மாநிலங்களவை எம்.பி யுமான ராம்ஜெத்மலானி காலமாகி விட்டார்.

இந்த நிலையில்  அருண்ஜேட்லி, ராம்ஜெத்மலானி மறைவை தொடர்ந்து 2 இடம் காலியானது மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு வரும் அக்டோபர் 16-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.  உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் சட்டப்பேரவை மூலம் புதிய உறுப்பினர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

Join our channel google news Youtube