இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்! எதிர்மறை தகவல்களை தரும் பொருளாதார அறிக்கை! பா.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கை!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த மே மாதம் 30 தேதி பதவியேற்ற நிலையில், இந்த அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், நேற்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஆய்வறிக்கையின் 2-ம் பாகத்தில் இடம் பெற்றுள்ள பொருளாதார வளர்ச்சி மந்தம், வருவாய் குறைவு, கச்சா எண்ணெய் விலையால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட அம்சங்கள் ஊக்கம் தருவதாக இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய அரசு சமர்ப்பித்துள்ள பொருளாதார ஆய்வறிக்கை எதிர்மறையான தகவல்களை தருவது போல் தமக்கு தோன்றுவதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.