2020-21 ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட் : நாளை தாக்கல் செய்கிறார் ஓ.பன்னீர்செல்வம்

2020-21 ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட் : நாளை தாக்கல் செய்கிறார் ஓ.பன்னீர்செல்வம்

நாளை (பிப்ரவரி 14-ஆம் தேதி) காலை 10 மணிக்கு துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்  தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 

பிப்ரவரி 1-ஆம் தேதி  மக்களவையில்  2020-2021-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.மத்திய பட்ஜெட் தாக்கல் செய்து முடிந்த நிலையில்  முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் பிப்ரவரி 4-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.இந்த கூட்டத்தில் பட்ஜெட் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் பின்  2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது .இதனால் நாளை (பிப்ரவரி 14-ஆம் தேதி) காலை 10 மணிக்கு துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்கிறார்.2021-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,அதிமுக அரசு தாக்கல் செய்யும் கடைசில் முழு பட்ஜெட் ஆகும்.

 

Join our channel google news Youtube