சென்னை  அருகே  ப்ரிட்ஜ் வெடித்து 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

சென்னை  அருகே  ப்ரிட்ஜ் வெடித்து 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்
சென்னை தாம்பரம் அருகே சேலையூரில் உள்ள வீடு ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.இதன்காரணமாக அந்த பகுதியில் புகை வந்ததன் காரணமாக அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்கள்.இதன் பின்னர் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.ஆனால் அதற்குள் அங்கு இருந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.முதற்கட்ட தகவல் படி ப்ரிட்ஜ் வெடித்து தீ ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதில்  2 பெண்கள் உள்பட 3 பேர் பலி உயிரிழந்தனர் என்றும்  தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பிரசன்னா, அவரது மனைவி அர்ச்சனா மற்றும் தாயார் ரேவதி உயிரிழப்பு என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.