தைவான் நாட்டில் பாலம் இடிந்து விழுந்தது !12 பேர் காயம் !

தைவான் நாட்டில் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது.  தைவான் நாட்டில் நன்ஃபங்காவ் என்ற இடத்தில்  கடலின் குறுகிய பகுதியில் கடலையும் இரண்டு நிலா பரப்பையும் இணைக்கும் பாலம் ஒன்று கடலில் உள்ளே இடித்து விழுந்துள்ளது.தற்போது இது குறித்த சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகியுள்ளது.
இதில் பாலத்திற்கு மேலே சென்று  கொண்டிருந்த டாங்கர் லாரி  தண்ணீரில் மீழ்கியது.மேலும் பாலத்திற்கு கீழே சென்று  கொண்டிருந்த 3 மீன் பிடி படகுகள் இடிபாட்டினுள் சிக்கி கொண்டது.இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.மேலும் 6 பேரை மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணையும் நடத்த பட்டு வருகிறது.