#BREAKING : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்- உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

#BREAKING : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்- உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் டிசம்பர் 30 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஆனால் மாநகராட்சி,நகராட்சி ,பேருராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி ஊரக உள்ளாட்சிகளுக்கு  தேர்தல் நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுடன்  விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Join our channel google news Youtube