BREAKING: 30 வாக்குச்சாவடிகளில் நாளை மறுநாள் மறுவாக்குப் பதிவு.!

  • முதற்கட்டதேர்தல் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
  • தேர்தலில் வாக்குச்சீட்டை மாற்றி வழங்குதல், சின்னங்களை மாற்றி அச்சடித்தல் உள்ளிட்ட காரணங்களால் மறுவாக்குப்பதிவு 30 வாக்குச்சாவடிக்கு  நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தற்போது மூன்று வருடம் கழித்து உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன் படி முதற்கட்டதேர்தல் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலின் போது தேர்தலில் வாக்குச்சீட்டை மாற்றி வழங்குதல், சின்னங்களை மாற்றி அச்சடித்தல் போன்ற பல புகார்கள் எழுந்த நிலையில் சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டு பின்னர் வாக்குப்பதிவு நடைபெற்றது.

Image

இந்நிலையில்  நேற்று முன்தினம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 30 வாக்குச் சாவடிகளுக்கு நாளை மறுவாக்குப்பதிவு என மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது . நேற்று முன்தினம் நடைபெற்ற  தேர்தலில் வாக்குச்சீட்டை மாற்றி வழங்குதல், சின்னங்களை மாற்றி அச்சடித்தல் உள்ளிட்ட காரணங்களால் நாளை மறுநாள் மறுவாக்குப் பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

author avatar
murugan