#BREAKING: மது வாங்க இதுதேவையில்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி .!

ஆதார் கார்டு எடுத்து வர வேண்டும் என விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டது என உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளளது.

தமிழகத்தில் மதுக்கடைகளை திறப்பதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனால், சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் சமூக இடைவெளியுடன் மதுபானங்களை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளளது. அதில்,  சென்னை உயர்நீதிமன்றத்தின் 2 உத்தரவுகள், மதுரை கிளையில் ஒரு உத்தரவை என அனைத்தையும் இடைக்கால தடை விதித்தது . இதன், மூலம் டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்கள் ஆதார் கார்டு எடுத்து வர வேண்டும் என விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டது.

இதனால், நாளை முதல் மதுக்கடைக்கு செல்லும் மதுபிரியர்கள் ஆதார் கார்டு எடுத்து செல்ல வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
Dinasuvadu desk